தமிழ்நாடு

கரோனாவிலிருந்து குணமடைந்தார் மு.க.ஸ்டாலின்

DIN


முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்புவார் என்றும், ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தபடி ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனை தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் எனினும் சில நாள்களுக்கு ஓய்வு தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றிலிருந்து முழுவதும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT