சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், எதிர்க்கட்சி துணைச் செயலாளர் பதவிக்கு அக்ரி கிருண்ஷமூர்த்தியை நியமிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.