தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டீஸை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் நேரில் அளித்தனர்.
ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 3 அல்லது அதற்கு பிறகு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கான நோட்டீஸை சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரிடம் இன்று போக்குவரத்து சங்கத்தினர் ஒப்படைத்தனர்.