தமிழ்நாடு

உளவுத் துறை ஐஜி உள்பட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

DIN


தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உளவுத் துறை ஐஜி ஆசியம்மாள் பணிடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக உளவுத் துறை ஐஜியாக செந்தில் வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை பூக்கடை காவல் துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருவல்லிக்கேணி காவல் துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் சிவச், ஹர்ஷ் சிங், சாய் பிரனீத் ஆகியோருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT