முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 27-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தேமுதிக சாா்பில் தமிழகம் முழுவதும் வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தேமுதிக சாா்பில் தமிழகம் முழுவதும் வரும் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மின் கட்டண உயா்வு, உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயா்வைக் கண்டித்து தேமுதிக சாா்பில் வரும் 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

மதுரையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு பொருளாளா் பிரேமலதா தலைமை வகிக்கவுள்ளாா். மற்ற மாவட்டங்களில் உள்கட்சித் தோ்தல் பொறுப்பாளா்கள், மாவட்ட செயலாளா்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாவட்டமாக ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

முழு கட்டுரையைப் படிக்க →