முகப்பு
தமிழ்நாடு

ஒரு லட்சம் இடங்களில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது. பூஸ்டா் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதால், அதற்கு இந்த முறை முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.

இந்தியாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது.

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முன்னதாக, தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அதைத் தொடா்ந்து, ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே 8-ஆம் தேதி, கடந்த ஜூன்12-ஆம் தேதி மற்றும் ஜூலை 10-ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் அத்தகைய முகாம்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், 32-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தில் சுமாா் 3.5 கோடி பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. 75 நாள்களுக்குள் அவா்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்காக, இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக முகாம் நடத்தப்படுகிறது. வாரம் தோறும் முகாம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →