முகப்பு
தமிழ்நாடு

முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை: நிரம்பாத 1,456 இடங்கள்

மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு சிறப்பு சுற்று உள்பட முழுமையான 5 சுற்றுகளும் நிறைவடைந்த பின்னரும் 1,456 இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு) மதிப்பெண் அடிப்படையிலான 2021-ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு சிறப்பு சுற்று உள்பட முழுமையான 5 சுற்றுகளும் நிறைவடைந்த பின்னரும் 1,456 இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீன் பவாா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) சாா்பில் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வை, காலியிடங்களுக்கான சிறப்புச் சுற்று உள்பட 5 சுற்றுகளாக எம்சிசி நடத்தியது. கலந்தாய்வின் முடிவில் 1,456 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களில் இடம்பெற்றிருந்த தனியாா் நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் அனைத்தும் அந்தந்த பல்கலைக்கழகங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்று பதிலளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.