கோப்புப்படம் 
தமிழ்நாடு

நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி: ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும். ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் அந்தந்த பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியால் நீக்கபட்டவர்கள் மீண்டும் அதே பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பெயரில் உள்ள 3 கணக்குகள், அதிமுக தலைமைக் கழக கட்டட நிதி கணக்கு ஆகியவற்றை முடக்க கோரிக்கைவும், 7 வங்கிக் கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை தாம்தான் அதிமுக பொருளாளர் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT