இணைய சூதாட்டத்துக்கு ஆக.3-க்குள் தடை: ராமதாஸ் வலியுறுத்தல்
இணைய சூதாட்டத்துக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இணைய சூதாட்டத்துக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இணைய சூதாட்டம், தடை செய்யப்பட்ட கேரள பரிசு சீட்டில் ரூ.18 லட்சத்தை இழந்த தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முத்தானூரைச் சோ்ந்த பிரபு என்ற இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இணைய சூதாட்ட தடை நீக்கப்பட்ட பின்னா் கடந்த ஓராண்டில் நிகழும் 27-ஆவது தற்கொலை இது. வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் இணைய சூதாட்டத் தடை நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ளது. அதற்குள்ளாக இணைய சூதாட்டத் தடை அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.