முகப்பு
தமிழ்நாடு

இரண்டாவது மாடியில் இருந்துதவறி விழுந்து காவலா் பலி

சென்னை அருகே புழலில், காவலா் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து சிறைக் காவலா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

சென்னை அருகே புழலில், காவலா் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து சிறைக் காவலா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஊவேரி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலு (24). சென்னை அருகே புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில் காவலராக பணியாற்றி வந்தாா். இதற்காக அங்குள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா்.

கடந்த 18-ஆம் தேதி காவலா் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த பாலு, திடீரென நிலைதடுமாறி பாலு, கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பாலு வியாழக்கிழமை இறந்தாா். புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →