மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் வெற்றி பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஓபன் அணியின் சி பிரிவில் பங்கேற்ற அவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
இதையும் படிக்க: சிவசேனை எம்.பி. மும்பையில் கைது, அமலாக்கத் துறை அதிரடி
ஐஸ்லாந்து வீரர் ஹான்ஸை எதிர்த்து விளையாடிய சேதுராமன் தனது 36வது நகர்வில் அவரை வீழ்த்தினார்.
அதேபோல, மகளிர் பிரிவில் இந்திய மகளிர் அணி பி பிரிவில் விளையாடிய வந்திகா அகர்வால் வெற்றி பெற்றார். அவர், தன்னை எதிர்த்து விளையாடிய இந்தோனேசிய வீராங்கனை சுகந்தரை தனது 45வது நகர்வில் வீழ்த்தினார்.
இந்திய மகளிர் அணி சி பிரிவில் விளையாடிய பிரதியுஷா போடாவும் வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.