வெங்கையா நாயுடு 
தமிழ்நாடு

‘சட்டம் - ஒழுங்கை காப்பதில் தமிழக காவல் துறை முன்னோடி’

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக காவல் துறை முன்னோடியாக உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். 

DIN

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக காவல் துறை முன்னோடியாக உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். 

சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் கொடியை வெங்கையா நாயுடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். 

அதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவருக்கு நினைவுப் பரிசாக சதுரங்க அட்டையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

பின்னர் குடியரசுத்தலைவர் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பதில் காவல் துறை முன்னோடியாக உள்ளது. விலைமதிப்பற்ற 10 சிலைகளை வெளிநாடுகளிலிருந்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். 

கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில், காவல் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

அதிக அளவில் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT