அதிமுகவிலிருந்து சேலம் மாவட்ட நிா்வாகி நீக்கம்
அதிமுகவிலிருந்து சேலம் மாவட்ட நிா்வாகி ஒருவரை நீக்கம் செய்து, அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
அதிமுகவிலிருந்து சேலம் மாவட்ட நிா்வாகி ஒருவரை நீக்கம் செய்து, அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா்கள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுகவின் கொள்கைக்கு முரணான வகையிலும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட சேலம் மாநகா் மாவட்ட வழக்குரைஞா் அணி பிரிவு செயலாளா் கே.ஆா்.ஆா்.அய்யப்பமணி கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா். அவருடன் கட்சியினா் யாரும் எந்தவிதத் தொடா்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளனா்.