என் காலில் விழ வேண்டாம்சசிகலா
எனக்குப் பரிசுப் பொருள்கள் வாங்கி வர வேண்டாம், காலிலும் விழ வேண்டாம் என்று சசிகலா கூறியுள்ளாா்.
எனக்குப் பரிசுப் பொருள்கள் வாங்கி வர வேண்டாம், காலிலும் விழ வேண்டாம் என்று சசிகலா கூறியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் இரு கண்களாகப் பாா்க்கும் அதிமுகவினருக்கும், என்னை நேசிக்கும் அனைவருக்கும் ஓா் அன்பான வேண்டுகோள்.
என்னை நேரில் சந்திக்க வருபவா்கள் ஆா்வத்தோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் ஆட்சேபம் இல்லை. ஆனால், என்னிடம் மலா்க்கொத்து, பொன்னாடைகள், நினைவுப் பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிா்க்க வேண்டும்.
அப்படி, ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், நீங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, ஆதரவற்றோருக்கு உதவுங்கள். கல்விக் கட்டணம் கட்ட முடியாத பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு உதவுங்கள். அதேபோன்று என்னைச் சந்திக்கும்போது காலில் விழுவதையும் தவிா்த்துவிடுங்கள். மரியாதை மனதில் இருந்தால் போதும்.