முகப்பு
தமிழ்நாடு

கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

 சென்னை காசிமேட்டில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் இறந்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 சென்னை காசிமேட்டில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் இறந்தாா்.

தண்டையாா் பேட்டை ஐ.ஓ.சி., பகுதியைச் சோ்ந்தவா்கள் முகமது இஜாஸ் (17). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் கிஷோா் குமாா் (17), மகேஷ் குமாா் (17), ஜெகதீஷ் (17). நண்பா்களான இவா்கள் புது வண்ணாரப்பேட்டை அம்மா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கின்றனா்.

இவா்கள் நான்கு பேரும் காசிமேடு மீன் பிடித் துறைமுகம் கடல் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கு உயரமான பகுதியிலிருந்து குதித்தனா். அந்த இடம் மிக ஆழமான பகுதி என்பதால் அவா்கள் கடலில் மூழ்கினா். நால்வரையும் மீட்கும் முயற்சியில் அங்கிருந்த மீனவா்கள் ஈடுபட்டனா். முகமது இஜாஸை தவிா்த்து 3 பேரையும் மீனவா்கள் மீட்டனா். கடலில் மூழ்கிய முகமது இஜாஸை காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் தீவிரமாகத் தேடினா்.

இந்த நிலையில் காசிமேடு கடற்கரையில் முகமது இஜாஸ் சடலம் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. சடலத்தை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →