முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் இலங்கை தூதர்
முதல்வர் ஸ்டாலினை இலங்கை தூதர் மிலின்டா மொரகொடா இன்று நேரில் சந்தித்து பேசினார்.
முதல்வர் ஸ்டாலினை இலங்கை தூதர் மிலின்டா மொரகொடா இன்று நேரில் சந்தித்து பேசினார்.
சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மீனவர்கள் குறித்து முதல்வருடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளனர். மேலும் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க- நெல்லை: காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலி
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு அரிசி, உயிா் காக்கும் மருந்துகள், பால் பவுடா் உள்ளிட்ட ரூ.45 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை மத்திய அரசின் அனுமதியுடன் தமிழக அரசு அண்மையில் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.