தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா: சென்னையில் 61

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.     

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 61 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 34,55,976-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,17,152-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 12,731 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 799 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி 100-க்கும் கீழ் பாதிப்பு குறைந்தது. அதன் பின்னா் அது படிப்படியாக குறைந்தே வந்தது. ஏப்ரல் 15-இல் 22 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது அது மீண்டும் அதிகரித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT