சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களது நூலை வெளியிட ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறந்த எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2022-2023ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிட கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
இதற்கான நூல் வெளியிட தலா ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதியுதவி அளிக்கப்படும்.
இதற்காக பெயர், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்த விவரங்களை தமிழக அரசின் tn.gov.in என்ற இணைய தளத்தில் (website) அறிந்து கொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பரிசுத் தொகை பெறதகுதியுடையோர் முறையான விண்ணப்பத்துடன்
படைப்பினை எழுத்து வடிவில் 2 (இரண்டு) பிரதிகள், விண்ணப்பதாரரின் கைப்பேசி எண்கள் குறிப்பிட்டு அரசுக்கு 30.06.2022க்குள் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
ஆணையர்,
ஆதிதிராவிடர் நல ஆணையரகம்,
சேப்பாக்கம்,
சென்னை-05.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.