தமிழ்நாடு

தனியார் ஸ்கேன் நிறுவனம் தொடர்பான 25 இடங்களில் 2வது நாளாக சோதனை

DIN


தனியார் ஸ்கேன் நிறுவனம் தொடர்பான தமிழகம் முழுவதும் 25 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் தனியார் ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை(ஜூன் 7) சோதனை நடத்தினர். 

அதன்படி, காஞ்சிபுரம், சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம் மற்றும் தனியார் ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உள்பட பல இடங்களில் வருவமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வரி ஏய்ப்பு புகார் காரணமாக தனியார் ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் ஸ்கேன் மையங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித் துறையினர் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சென்னை வடபழனி, அண்ணாநகர், நங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பாடி  உள்ளிட்ட 13 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், தனியார் ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT