தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைதான நிலையில், தில்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் 9 இடங்களில் இன்று காலைமுதல் நடத்தி வருகின்றனர்.