சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை பிராட்வேயில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

DIN


சென்னை: சென்னை பிராட்வேயில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை பிராட்வேயில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை பிராட்வேயில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யும் போது பணியில் இருந்த தலைமைச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர்.

என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 2 மாதம் கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT