தமிழ்நாடு

ஊட்டச்சத்து பெட்டக ஒப்பந்தம்: கே.அண்ணாமலை வரவேற்பு

DIN

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதற்காக தமிழக அரசு போட்டுள்ள ஒப்பந்தத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கொடுத்தபின் ஏன் கொடுத்தீா்கள் என்று கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. கருப்புப் பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு ஒப்பந்தத்தை வழங்கப் போவதாக தமிழக பாஜக கூறியது.

தற்போது அந்த ஒப்பந்தத்தில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது, பாஜக வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் பாஜக கொடுத்த புகாரையும் திமுக அரசு விசாரித்து குற்றம் செய்தவா்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும் ஆவின் ஹெல்த் மிக்ஸின் நிலை என்ன என்பதையும் திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT