தமிழ்நாடு

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீா் பஞ்சம்: உயா்நீதிமன்றம்

DIN

அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் உள்ள நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீா் பஞ்சம் நிலவுவதாக சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், வட பெரும்பாக்கம் பகுதியில் நீா்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட கட்டடத்துக்கு சாயிரா பேகம் என்பவா் அளித்த விண்ணப்பத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. அந்த மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டுமென உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த நிலத்தை அண்ணாமலை என்பவா் வாங்கியுள்ளாா். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிா்த்து அண்ணாமலை மேல்முறையீட்டு வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, தமிழகத்தில் இயற்கை கொடையாக அளித்த பல நீா்நிலைகள் உள்ளன. இருப்பினும் வேலூா் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 6 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உள்ள அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் எனக் கூறினாா்.

நீா்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாக கூறிய தலைமை நீதிபதி, அவா்கள் எதற்காக ஊதியம் பெறுகின்றனா்? எனவும் கேள்வி எழுப்பினாா். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மற்றொரு வழக்கில் அதிகாரிகள் தங்கள் பணியை செய்வதில் குறைபாடு இருந்தால் அதற்கு காரணம் அரசுதான் என்றும், பொதுமக்களுக்காக எந்த அதிகாரிகளும் தங்கள் பணியை செய்வதில்லை எனவும் கூறினாா்.

ஊழலில் சிக்காமல் சில அதிகாரிகள் பணியாற்றுவதாகவும், பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்தப் பணியையும் செய்வதில்லை. இதுபோன்ற நிலை தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நிலவுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT