தமிழ்நாடு

கரோனா: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,366-ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,366- ஆக அதிகரித்துள்ளது.

DIN

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,366- ஆக அதிகரித்துள்ளது.
 அதேபோன்று செவ்வாய்க்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 737-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 ஒமைக்ரானிலிருந்து உருமாற்றமடைந்து பிஏ-5 புதிய வகை தீநுண்மி கடந்த ஒரு மாதத்தில் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் கரோனா தொற்றுக்குள்ளானோரில் மட்டும் 25 சதவீதம் பேருக்கு அந்த வகை பாதிப்பே ஏற்பட்டுள்ளது. இதுவே அண்மைக் காலமாக நோய்ப் பரவல் அதிகரிக்க காரணம் என சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 செவ்வாய்க்கிழமை தகவல்படி 322 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,19,905-ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT