தமிழ்நாடு

சென்னை கடற்கரை- தாம்பரம் ரயில்கள் ரத்து

DIN

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான சில புகா் ரயில்கள் வியாழக்கிழமை முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - விழுப்புரம் இடையேயான பாதையில் தாம்பரம் சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் 24-ஆம் தேதி முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், 12 புகா் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23, 24, 25,27 தேதிகளில் ரத்து செய்யப்படும் ரயில்கள்:

தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.25, 11.25, 11.45-க்கு புறப்படும் ரயில்கள், கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.20, 11.40 மற்றும் 11.59-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஜூன் 26-ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள்:

தாம்பரத்திலிருந்து கடற்கரைக்கு இரவு 10.40, 11.15 மற்றும் 11.35-க்கு புறப்படும் ரயில்கள், கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு இரவு 11.30, 11.40 மற்றும் 11.59-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT