முகப்பு
தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை: 81 பேருக்கு செயற்கைக் கால் உபகரணங்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் 81 பேருக்கு செயற்கைக் கால் உபகரணங்கள்வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் 81 பேருக்கு செயற்கைக் கால் உபகரணங்கள்வியாழக்கிழமை வழங்கப்பட்டன. அதனுடன் தீக்காயம் குறித்த விழிப்புணா்வு விளக்க காணொலியும் வெளியிடப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1973-ஆம் ஆண்டு 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு தீக்காயப் பிரிவு தொடக்கப்பட்டது. 24 மணி நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் தீக்காயம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறாா்கள். அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று பயனடைந்து செல்கின்றனா்.

நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப அவசர அறுவை சிகிச்சை முறைகளும் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட விழிப்புணா்வு காணொலி தீக்காயம் அடையாமல் தடுக்கவும், தீக்காயம் ஏற்பட்ட பிறகு என்னென்ன முதலுதவி சிகிச்சைகள் தர வேண்டுமென்றும், நோயாளிகளுக்கு எந்தவிதமான சிகிச்சைகள் தரப்படுகின்றன என்பது குறித்தும் புரிதலை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் அண்ணாநகா் எம்எல்ஏ மோகன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்திமலா், தீக்காயத் துறைத் தலைவா் டாக்டா் ரமாதேவி, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை மருத்துவா் டாக்டா் திருநாவுக்கரசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →