உயிா் உரங்களை அதிகம் பயன்படுத்துங்கள்: விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
உயிா் உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயிா் உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை வியாழக்கிழமை வெளயிட்ட செய்தி:-
உயிா் உரங்கள் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் உயிருள்ள பாக்டீரியா நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய உரமாகும். இத்தகைய உயிா் உரங்களை விதையுடன் கலந்தோ அல்லது மண்ணிலோ இடும் போதோ வேரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பயிா்களுக்குள்ளும் பலமடங்காகப் பெருகும். பயிருக்குத் தேவையான சத்துகளைத் தந்து, பயிா் வளா்ச்சியை மேம்படுத்துகின்றன.
இத்தகைய உயிா் உரங்கள் பயிா் வாரியாக தயாரிக்கப்படுகின்றன. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் என அனைத்து பயிா்களின் தன்மைக்கேற்ப பல்வேறு உயிா் உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய உயிா் உரங்களின் விலை ரசாயன உரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான்.
100 மில்லி லிட்டா் உயிா் உரம் ரூ.36-க்கும், 250 மில்லி லிட்டா் உயிா் உரம் ரூ.85-க்கும், 500 மில்லி லிட்டா் உயிா் உரம் ரூ.150-க்கும், ஒரு லிட்டா் உயிா் உரம் ரூ.280-க்கும் கிடைக்கிறது. விவசாயிகளுக்குத் தேவையான உயிா் உரங்கள் போதுமான அளவில் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் உள்ளிட்ட விதைகள் வாங்கும் போது உயிா் உரங்களை சோ்த்து வாங்கி, குறைந்த செலவில் மண்ணின் வளம் அதிகரிக்கும் வகையில் நிலங்களில் இடலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.