காலதாமதமாக இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில்கள்: காரணம் என்ன?
சென்னை மெட்ரோ ரயில்கள் காலதாமதாக இயக்கப்படுவது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்கள் காலதாமதாக இயக்கப்படுவது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையானது இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுவதில் கடந்த சில மணி நேரங்களாக தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் மேலும் 1,359 பேருக்கு கரோனா
Advertisement
Advertisement
இந்நிலையில் இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு வழித்தடங்களிலும் சென்னை மெட்ரோ ரயில் சென்று வருவதில் சிறு தாமதம் ஏற்படுகிறது. இந்த தொழில்நுட்ப கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நெரிசல்மிகு நேரத்திலும் இரண்டு வழித்தடங்களில் செல்லும் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடத்திற்கு ஒருமுறை சற்று தாமதமாக இயக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.