தமிழ்நாடு

நளினிக்கு 6-ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு

DIN


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதியான நளினி பரோலில் வெளியே உள்ள நிலையில். அவருக்கு 6 ஆவது முறையாக மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர்களில் ஒருவரான நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூா் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாா். அவரது கணவர் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் தங்களை விடுவிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், அவரது தாயாா் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தாா். 

அதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. 

பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி அடுத்த பிரம்மபுரத்திலுள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்து அவரது தாயாரை கவனித்து வருகிறாா். 

அதன்பின் அவரது பரோல் தொடா்ந்து 5 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் அவா் திங்கள்கிழமை சிறைக்கு திரும்ப வேண்டியிருந்தது. 

இந்நிலையில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அவரது தாயாா் பத்மா நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தாா். 

அவரது கோரிக்கையை ஏற்று தொடா்ந்து நளினிக்கு 6-ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, ஜூலை 26-ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளாக வேலூா் சிறைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT