தமிழ்நாடு

சென்னையில் 600க்கும் அதிகமானோருக்கு கரோனா

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 600ஐக் கடந்துள்ளது. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 600ஐக் கடந்துள்ளது. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுஇடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

எனினும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. நேற்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 632 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு 230, திருவள்ளூர் 79, கோவை 70, காஞ்சிபுரம் 59, கன்னியாகுமரி 51, திருச்சி 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT