தமிழ்நாடு

சென்னையில் 600க்கும் அதிகமானோருக்கு கரோனா

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 600ஐக் கடந்துள்ளது. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 600ஐக் கடந்துள்ளது. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுஇடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

எனினும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. நேற்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 632 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு 230, திருவள்ளூர் 79, கோவை 70, காஞ்சிபுரம் 59, கன்னியாகுமரி 51, திருச்சி 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT