கோப்புப்படம் 
தமிழ்நாடு

இரவில் பட்டாசு ஆலைகள் இயங்கினால் உரிமம் ரத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலோ பணியில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும்

DIN

விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினால் ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு ஆலைகள் அதிகம் இயங்கி வருகின்றன. 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில் 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் இன்று அனுமதி அளித்துள்ளார்.

தொழிலாளர்களின் நலன் கருதி இந்த ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறிய அவர், விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலோ பணியில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT