தமிழ்நாட்டில் புதிதாக 320 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 320 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 320 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பபட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 52,536 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 320 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைன்: சற்று நேரத்தில் பிரதமர் ஆலோசனை
மேலும் 946 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,07,595 பேர் குணமடைந்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் என 3 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 38,009 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 4,437 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.