முகப்பு
தமிழ்நாடு

கம்பம் நகர்மன்றத் தலைவராக வனிதா நெப்போலியன் போட்டியின்றித் தேர்வு

கம்பம் நகர்மன்றத் தலைவராக திமுக கவுன்சிலர் வனிதா நெப்போலியன், வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு பெற்றார்.

தமிழ்நாடு

கம்பம் நகர்மன்றத் தலைவராக வனிதா நெப்போலியன் போட்டியின்றித் தேர்வு

கம்பம் நகர்மன்றத் தலைவராக திமுக கவுன்சிலர் வனிதா நெப்போலியன், வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு பெற்றார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகர்மன்றத் தலைவராக திமுக கவுன்சிலர் வனிதா நெப்போலியன், வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். வேறு யாரும் தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு பெற்றார்.

தேனி மாவட்டம் கம்பம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு 3 ஆவது வார்டில் திமுக கவுன்சிலர் வனிதா நெப்போலியன் வெற்றி பெற்றார். இவரை திமுக தலைமை, நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. வெள்ளிக்கிழமை தேர்தல் அலுவலர் பாலமுருகனிடம் வனிதா நெப்போலியன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 14 ஆவது வார்டு திமுக உறுப்பினர் வசந்தி முன்மொழிந்தார். 15 ஆவது வார்டு உறுப்பினர் சுல்தான் சல்மான் பார்சி வழிமொழிந்தார்.

வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ப.பாலமுருகன் அறிவித்தார்.

மறைமுகத் தலைவர் தேர்தலில் 25  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →