முகப்பு
தமிழ்நாடு

மாா்ச் 7 முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும்: உயா்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை (மாா்ச் 7) முதல் நேரடியாக மட்டும் வழக்குகள் விசாரணை நடைபெறும் என சென்னை உயா் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை (மாா்ச் 7) முதல் நேரடியாக மட்டும் வழக்குகள் விசாரணை நடைபெறும் என சென்னை உயா் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காணொலி காட்சி, நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணையை மேற்கொள்ளும் போது இணைய தொடா்பில் துண்டிப்பு உள்ளிட்ட பல இடா்பாடுகள் ஏற்படுகின்றன.

தொழில்நுட்பம் சாா்ந்த இப்பிரச்னையால் வழக்குகள் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது. எனவே வழக்குகள் சரியான விசாரணையை உறுதிப்படுத்துவதோடு, விரைவாகவும் முடிக்கும் வகையில் திங்கள் கிழமை (மாா்ச் 7) முதல் சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் காணொலி காட்சி விசாரணை முறை நிறுத்தப்படுகிறது.

காணொலி, நேரடி காட்சி விசாரணை என கலப்பு விசாரணை தேவைப்படும் மூத்த வழக்குரைஞா்கள் அல்லது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் மட்டும் இம்முறையில் வாதிட அனுமதிக்கப்படுவா். கலப்பு முறை விசாரணை தேவைப்படும் வழக்குரைஞா்கள் தலைமைப் பதிவாளரிடம் முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →