முகப்பு
தமிழ்நாடு

பழனிசெட்டிபட்டியில் அதிமுக ஆதரவுடன் அமமுக வெற்றி

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் அமமுக கைப்பற்றியுள்ளது.

தமிழ்நாடு

பழனிசெட்டிபட்டியில் அதிமுக ஆதரவுடன் அமமுக வெற்றி

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் அமமுக கைப்பற்றியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் அமமுக கைப்பற்றியுள்ளது.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில், திமுக 7 வார்டுகளிலும், அமமுக  வார்டு, அதிமுக 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், திமுக சார்பில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 15-வது வார்டு உறுப்பினர் மு.பவானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் 11-வது வார்டு உறுப்பினர் அ.மிதுன்சக்கரவர்த்தி போட்டியிட்டார்.

தேர்தலில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில், அமமுக வேட்பாளர் அ.மிதுன்சக்கரவர்த்தி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் இருவரில், ஒருவர் திமுகவிற்கும், மற்றொருவர் அமமுகவிற்கும் ஆதரவளித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அமமுக வேட்பாளர் 8 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தேர்தலில் அதிமுக உறுப்பினர்கள் 2 பேரின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பதாக அமமுக நிர்வாகிகள் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →