முகப்பு
தமிழ்நாடு

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: ஈரோடு அணி 2-ம் இடம்

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி 2-ம் இடம்பெற்றுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஈரோடு அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. 
பகிர்:

ஈரோடு: மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் ஈரோடு அணி 2-ம் இடம்பெற்றுள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூரில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. 11,13,15,17 வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கேரளம், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திருப்பூர் அணியும், ஈரோடு ஹாக்ஸ் அணியும் மோதின.

இதில் 2:1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் அணி முதலிடத்தையும், ஈரோடு அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இரண்டாம் இடத்தை பிடித்த ஶ்ரீஹரி, ரோகித், மிதுன், ஜீவா, சாந்தனு, ஜூடோ சாரன், தரணீஷ் ஆகியோரை அணியின் பயிற்சியாளர் ராஜகோபால், கவுதம், மனோஜ் பாராட்டி வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.