முகப்பு
தமிழ்நாடு

தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று!

எத்தனை சோதனைகள் - அடக்குமுறைகள் - அவதூறுகள்! அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்!

இனப் பகைவரும் அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், பெரியார் - அண்ணா - கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தமிழ்நாட்டில் திமுக முதன்முதலில் ஆட்சி அமைத்த நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →