முகப்பு
தமிழ்நாடு

ரெளடி கொலை வழக்கு: 6 போ் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

சென்னை வில்லிவாக்கத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரா் கோயில் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் பா.ரஞ்சித் (22). இவா் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ரஞ்சித் கடந்த வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் ஆடு தொட்டி அருகே செல்லும்போது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக வில்லிவாக்கம் போலீஸாா் நடத்திய விசாரணையில், முன்பகை காரணமாக வில்லிவாக்கம் ஜெயகாந்தன் (25), காா்த்திக் (28), ஆவடி தினேஷ்குமாா் (37), கோயம்பேடு பத்மநாபன் (32), முகப்போ் மணிகண்டன் (26), விமல் (24) ஆகிய 6 போ் ரஞ்சித்தை கொலை செய்தது தெரியவந்தது. அவா்கள் 6 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →