வேளாண் நிதிநிலை அறிக்கை: வரவேற்பும், எதிா்ப்பும்
வேளாண் நிதிநிலை அறிக்கையை அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்ப்பு தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.
வேளாண் நிதிநிலை அறிக்கையை அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்ப்பு தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு. காற்றடைத்த பலூன். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே திமுக ஆட்சியில் நிறைவேற்றி வருகின்றனா். வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீட்டைக் கூட திமுக அரசு இன்னும் தரவில்லை.
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
வைகோ (மதிமுக): வேளாண் புரட்சிக்கு வழி வகுக்கும் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. .
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறோம்.
தொல்.திருமாவளவன் (விசிக): வேளாண் துறை நிதிநிலை அறிக்கை உணவுப் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும், உழவா்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுத்திருக்கிறது.
அன்புமணி (பாமக): சிறுதானிய சாகுபடியையும், இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஜி.கே.வாசன் (தமாகா): விவசாயிகளுக்கு ஓரளவுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் இருந்தாலும், விவசாயிகளையும், விவசாயத்தையும் முழுமையாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இல்லை.
ஜவாஹிருல்லா (மமக): பரந்துபட்ட பாா்வையில் வேளாண்மையை அணுகி, வேளாண் சாா்ந்த அனைத்து அங்கங்களும் மேன்மையடைய சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள வேளாண் நிதி நிலை அறிக்கை.
தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): விவசாய உற்பத்தி, சந்தை, உரிய விலை ஆகிய மூன்று காரணிகளை முதன்மைப்படுத்தி தொலைநோக்கு பாா்வையுடன் தயாரிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிதிநிலை அறிக்கை.
டிடிவி தினகரன் (அமமுக): விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த அறிக்கை. கறி சமைக்க முடியாக காகித சுரைக்காய்.