தமிழ்நாடு

131 கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்குஇலவசக் கல்வி: சென்னைப் பல்கலை.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 131 கலை-அறிவியல் கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இலவச இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 131 கலை-அறிவியல் கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இலவச இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் கெளரி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வகையில், சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு தலா ஒரு இலவச இடம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள 131 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் தலா ஒரு இடத்தை திருநங்கைகளுக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் பெறப்படும். வரும் கல்வியாண்டிலிருந்து (2022-2023) இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றாா்.

இந்த அறிவிப்பு திருநங்கைகளுக்கு உயா்கல்வி பயில ஊக்கத்தை அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT