கோப்புப்படம் 
தமிழ்நாடு

மார்ச் 31ல் பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

வருகிற மார்ச் 31 ஆம் தேதி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். 

DIN

வருகிற மார்ச் 31 ஆம் தேதி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். 

நான்கு நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை மற்றும் அபுதாபி சென்றுள்ளார். துபையில் இருந்து இன்று அபுதாபி சென்றுள்ள அவர் அங்கு முதலீட்டாளர்களை சந்தித்துப் பேசுகிறார். நாளையுடன் அவரது துபை பயணம் முடிவடைய உள்ள நிலையில் தில்லியில் மூன்று நாள்கள் இருக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

வருகிற மார்ச் 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார். அப்போது நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 1 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

SCROLL FOR NEXT