முகப்பு
அரசு மருத்துவமனையில் கரு வளர்ச்சி குறைபாட்டை கண்டறியும் வசதி: முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் கரு வளர்ச்சி குறைபாட்டை கண்டறியும் வசதி: முதல்வர் துவக்கி வைத்தார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையை துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் கரு வளர்ச்சி குறைபாட்டை கண்டறியும் வசதி: முதல்வர் துவக்கி வைத்தார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையை துவக்கி வைத்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
அரசு மருத்துவமனையில் கரு வளர்ச்சி குறைபாட்டை கண்டறியும் வசதி: முதல்வர் துவக்கி வைத்தார்
பகிர்:

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையை துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையை தொடங்கி வைத்தார்.

மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட பரிசோதனை திட்டத்தையும் முதல்வர் தொடக்கி வைத்துள்ளார்.

இப்பேரவையை தொடங்கி வைக்க தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு வருகை புரிந்த போது, முதல்வர் ஸ்டாலின், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளை கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவையையும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி, பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையங்கள், சீமாங்க் மையங்கள் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில மருத்துவமனையில் அதாவது அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக ஆட்டோடெல்ஃபியா மெட்டர்னல் அனலைசர் என்ற மருத்துவக் கருவி தருவிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிநவீன முழு உடற்பரிசோதனை மையத்தில், சிறப்பு தனித் தொகுப்பாக, ஆரம்ப நிலை கரு பரிசோதனைக்கு 1000 ரூபாயும், இப்பரிசோதனையுடன் கர்ப்பிணித் தாய்க்கு கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ள 2000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கர்ப்ப காலத்தில் (11-14 வாரங்கள்) இந்த பரிசோதனை செய்வதன் மூலமாக கரு மரபணு சார்ந்த பல பிரச்னைகள் கண்டறியப்பட்டு, உடல் உறுப்பு ஊனத்துடன் குழந்தை வளர்வது தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த வசதி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →