தமிழ்நாடு

7 பேர் விடுதலை: தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கில், தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் நளினியை விடுதலை செய்வது குறித்து எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா?  என அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. 

7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளதும், ஆளுநருக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT