தமிழ்நாடு

சென்னையில் விசாரணைக் கைதி மரணம்: சிசிடிவி காட்சி வெளியீடு

DIN

சென்னையில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, விக்னேஷ் என்ற பழைய கைதி, காவலரை கத்தியால் குத்தி தப்பிச் சென்றதாகவும் காவலர்கள் விக்னேஷை துரத்திப் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், காவல் நிலையத்தில் இருந்த விக்னேஷ், ஏப்ரல் 20 செவ்வாய்க்கிழமை அதிகாலை வாந்தி எடுத்ததாகவும், பின் வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விக்னேஷை காவலர்கள் துரத்திச் சென்ற சிசிடிவி கேமரா காட்சிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

சிசிடிவி கேமரா பதிவுகளில் விக்னேஷ் தப்பிக்க முயன்றதும் காவலர்கள் அவரைப் பிடிக்கும் காட்சிகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT