தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 105.80 அடியாக உயர்வு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 3,111கன அடியிலிருந்து 5,310 கன அடியாக அதிகரித்து உள்ளது. 

நீர்வரத்து அதிகரித்ததால், இன்று புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.58 அடியிலிருந்து 105.80 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 72.56 டிஎம்சியாக  உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு திங்கள்கிழமை காலை வினாடிக்கு 1,850 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 3,111 கன அடியாகவும், இன்று புதன்கிழமை காலை வினாடிக்கு 5,310 கன அடியாகவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT