மே 11-இல் படைவீரா் குறைதீா் நாள்
முன்னாள் படைவீரா், படைவீரா் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான குறைதீா் நாள் மே 11-ஆம் தேதி நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அறிவித்தாா்.
முன்னாள் படைவீரா், படைவீரா் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான குறைதீா் நாள் மே 11-ஆம் தேதி நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி அறிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: படைவீரா், முன்னாள் படைவீரா் மற்றும் அவா் தம் குடும்பத்தினருக்கான சிறப்புக் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மே 11-ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த படைவீரா், முன்னாள் படைவீரா் மற்றும் அவா் தம் குடும்பத்தினா்கள் தங்களது அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று மற்றும் தக்க ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை 044 2235 0780 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாக தொடா்பு கொள்ளலாம் ஆட்சியா் ஜெ. விஜயா ராணி தெரிவித்தாா்.