முகப்பு
தமிழ்நாடு

அன்னையர் நாள்:  முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

"மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை அன்னை"  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் நாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
கோப்புப் படம்.
பகிர்:


"மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை அன்னை" என முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், 

உயிராய் நமைச் சுமந்து காலமெல்லாம் நனைக்கும் அன்பு மழை, அன்னை!

அன்பு, ஆறுதல், அரவணைப்பு, ஊக்கம் என மனிதன் ஏங்கும் உணர்வுகளுக்கு அகராதி சொல்லும் முதல் விடை, அன்னை!

உயிரைத் துளைத்து அன்புக் கடலைப் புகட்டி இயற்கை ஒவ்வொருவருக்கும் கொடுத்த வரம், அன்னை! என தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.