முகப்பு
தமிழ்நாடு

சாலைப் பாதுகாப்பு: பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

சென்னையில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு கிரீன்வாய்ஸ் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

சென்னையில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு கிரீன்வாய்ஸ் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

சென்னை மயிலாப்பூா் லஸ் காா்னா் பகுதியில் கிரீன்வாய்ஸ் அமைப்பு சாா்பில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்தோருக்கும், காரில் சீல் பெல்ட் அணிந்து வந்தோருக்கும் 100 இலவச மரக்கன்றுகளை போக்குவரத்து காவல் ஆய்வாளா் சாம் பெனட், கிரீன்வாய்ஸ் அமைப்பின் நிறுவனா் வீரராகவன் உள்ளிட்டோா் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், கிரீன்வாய்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் சாமிநாதன், முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →