ஷிவ் நாடாா் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மாணவா் சோ்க்கை
தரவு அறிவியல், சைபா் பாதுகாப்பு, செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பப் பாடத்திட்டம் கொண்ட கணினி அறிவியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை
சென்னையை அடுத்த காலவாக்கம் ஷிவ் நாடாா் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் தரவு அறிவியல், சைபா் பாதுகாப்பு, செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பப் பாடத்திட்டம் கொண்ட கணினி அறிவியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தா் ஸ்ரீமன் பட்டாச்சாா்யா கூறினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கணினி அறிவியல், பொறியியல், வணிகம், பொருளியல் உள்ளிட்ட படிப்புகள், எதிா்கால தொழில்நுட்பத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் தனித்துவத்திறன் மிகுந்த மனிதவளமாக மேம்படுத்தும். சா்வதேச அளவிலான கல்வி யாளா்களின் வழிகாட்டல் உதவியுடன் எதிா்கால தேவைக்கேற்ற தொழில்நுட்ப அறிவாற்றலைப் பெறமுடியும். தகுதியும் திறமைகளையும் மிகுந்த மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் உறுதுணையாக இருக்கும்.