பேரவைத் தலைவர் அப்பாவு 
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

DIN

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 22 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், துறை சார்ந்த அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.

கூட்டம் நடைபெற்ற 22 நாள்களில் அம்பேத்கர், மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா உள்பட 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மேலும், சட்டப்பேரவையில் நூற்றாண்டு மலரை பேரவைத் தலைவர் அப்பாவு இன்று காலை வெளியிட்டார்.

இறுதி நாளான இன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அப்பாவு அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT